உக்ரேனியர்களுக்கு உதவிய மக்களுக்கு நன்றி: கர்தினால் Krajewski
மெரினா ராஜ் – வத்திக்கான்
உக்ரேனிய மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கிறிஸ்துவின் பிறப்பு மகிழ்வை உண்மையாக்கிய அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவிப்பதாகக் காணொளிச் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Konrad Krajewsk .
சனவரி 07, சனிக்கிழமையன்று, kyiv நகரிலிருந்து தான் திரும்பியதாகவும், மின்சாரம் தண்ணீர், உணவு, உடையின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Krajewsk.
துன்புறும் உக்ரேனிய மக்களுக்கு உடை வாங்கும் எண்ணத்தில் eppola அமைப்பின் வழியாக 1,00,000 ஐரோப்பிய யூரோக்களை நிதியாகத் திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், 2,50,000-க்கும் அதிகமான யூரோக்களை மக்கள் தாராளமாகக் கொடுத்து உதவி உண்மையான கிறிஸ்மஸ் பெருவிழாவைக் காணச் செய்துள்ளனர் என்றும், இதுவே உண்மையான கிறிஸ்மஸ் என்றும், அச்செய்தியில் மகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Krajewsk
மேலும், விலைமதிப்புள்ள உடைகளைக் குறைவான விலைக்கு கொடுத்து உதவிய தாராளமனம் கொண்ட இத்தாலி நாட்டுத் தொழில்முனைவோருக்கும், மேலும், மூன்று கனரக வாகனங்கள் வழியாக எல்விவ் மற்றும் போலந்து நாட்டிலிருந்து உடைகளைக் கொடுத்து உதவிய அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் கர்தினால் Krajewsk.
அதிகக் குளிரான இக்காலத்தில் வெப்பம் மற்றும் வெளிச்சம் இல்லாமல் உயிர்வாழும் மக்களுக்கு, தங்களது பணத்தைக் கொடுத்ததன் வழியாக துன்புறும் உக்ரேனிய மக்களின் வாழ்விற்கு பலர் உயிர்கொடுத்துள்ளார்கள் என்றும், இறைவன் அவர்கள் ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிக்கத் தான் தொடர்ந்து செபிப்பதகாவும் கூறியுள்ளார் கர்தினால் Krajewsk .
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்