தேடுதல்

திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் புதிய அமைப்புமுறை திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் புதிய அமைப்புமுறை 

திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் புதிய அமைப்புமுறை

திருப்பீட சமூகத்தொடர்புத்துறை தலைவர் Paolo Ruffini அவர்கள், கடந்த டிசம்பர் 31ம் தேதி அறிவித்தபடி, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் புதிய அமைப்புமுறை உருவாக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெசாந்த்ரோ ஜிசோத்தி (Alessandro Gisotti) அவர்களுடன், அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த மூவர் மற்றும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொண்ட பன்னாட்டு குழு செயல்படும் என்று, சனவரி 11, இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் தலைவர் Greg Burke அவர்களும், உதவித் தலைவர்  Paloma Garcia Ovejero அவர்களும் பதவி விலகியதையடுத்து, திருப்பீட சமூகத்தொடர்புத்துறை தலைவர் Paolo Ruffini அவர்கள், கடந்த டிசம்பர் 31ம் தேதி, திருப்பீட செய்தித் தொடர்பகத்திற்கு, புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, அந்தத் தொடர்பகத்தின் மூத்த ஆலோசகராக, பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த  Romilda Ferrauto அவர்களும், இயக்குனருக்கு உதவியாளர்களாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அருள்சகோதரி Bernadette M. Reis அவர்களும், பெரு நாட்டு Raúl Cabrera Pérez அவர்களும், அலுவலக நிர்வாகியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு Thaddeus M. Jones அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே வத்திக்கான் வானொலியில் பணியாற்றியவர்கள் மற்றும் செய்தித்துறையில் அனுபவமிக்கவர்கள் ஆவார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2019, 15:58