புத்த ஆலயத்தின் 230வது ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாகவும், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் சார்பாகவும் Wat Phra Chetuphon புத்த ஆலயத்தின் 230வது ஆண்டு நிறைவு விழாவுக்கு, வாழ்த்துக்களை அனுப்புவதாக, ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் ஒரு செய்தியில் கூறியுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள Wat Phra Chetuphon புத்த ஆலயத்தின் 230ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி முடிய நடைபெறுவதையொட்டி, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் செயலர், ஆயர் Ayuso Guixot அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
Wat Pho என்று மக்களால் பொதுவாக அழைக்கப்படும் இந்த புத்த ஆலயத்திற்கும், கத்தோலிக்க திருஅவைக்கும், 1972ம் ஆண்டு முதல், நல்லுறவுகள் உருவாகியுள்ளன என்றும், இவ்வாலயத்தின் புத்த துறவிகள் 1972ம் ஆண்டு 5 தேதி புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களை திருப்பீடத்தில் முதல் முறையாக சந்தித்தனர் என்றும் ஆயர் Ayuso Guixot அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புத்த துறவிகளும், கத்தோலிக்கத் திருஅவையும் மேற்கொண்டுள்ள இணைந்த பயணம், தாராள மனதுடன் நடைபெற்று வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களை, ஆயர் Ayuso Guixot அவர்கள் இச்செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்