தேடுதல்

15வது உலக ஆயர்கள் மாமன்றம் 15வது உலக ஆயர்கள் மாமன்றம் 

இளையோர் ஆயர்கள் மாமன்றத்தின் பிரதிநிதிகள்

CCBI பேரவை பிரதிநிதிகளாக, சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, விஜயபுரம் ஆயர் Sebastian THEKETHECHERIL, பெல்லாரி ஆயர் ஹென்ரி டிசூசா, கட்டக்-புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

வருகிற அக்டோபர் 3ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் உட்பட, CCBI எனப்படும் இந்திய ஆயர் பேரவையின் இலத்தீன் வழிபாட்டுமுறை பேரவையிலிருந்து நால்வர் கலந்துகொள்வார்கள் என இச்சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையோர், விசுவாசம், அழைத்தலை தெளிந்துதேர்தல் எனும் தலைப்பில், இளையோரை மையப்படுத்தி நடைபெறும், 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் பெயர்கள், மாமன்றத்தின் தலைவர் பிரதிநிதிகள், செயலாளர்கள், திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் என அனைவரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அக்டோபர் 3 புதன்கிழமையன்று, மாமன்றப் பிரதிநிதிகளுடன் திருப்பலி நிறைவேற்றி, 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தை ஆரம்பித்து வைக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2018, 15:25