தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

கத்தோலிக்கருக்கு திருத்தந்தை எழுதியுள்ள கடிதம்...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடு குற்றங்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து உலக கத்தோலிக்கருக்கு எழுதியுள்ள கடிதம் ஊக்கமளிப்பதாய் உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அருள்பணியாளர்களின் பாலியல் குற்றங்களைச் சகித்துக்கொள்ளவே முடியாது என,    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 20, இத்திங்களன்று வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் உறுதியாய் கூறியிருப்பது, ஊக்கமூட்டுகின்றது என, சிறார் பாதுகாப்புக்குரிய பாப்பிறை குழு கூறியுள்ளது.

அருள்பணியாளர்களால் நடத்தப்பட்ட பாலியல் முறைகேடுகள், திருஅவையின் சில உறுப்பினர்களால், அவை மறைத்து வைக்கப்பட்டது போன்றவற்றால் துன்புறும் மக்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது, அக்குழு.

இறைமக்கள் எல்லாருக்குமென திருத்தந்தை எழுதியுள்ள அக்கடிதத்தில், இவ்விவகாரத்தில் சிறிதுகூட சகிப்புத்தன்மை காட்டக் கூடாது என, திருஅவைத் தலைவர்களுக்குத் திருத்தந்தை அழைப்பு விடுத்திருப்பது, தங்களது குழுவினருக்கு ஆதரவாக இருக்கின்றது எனவும், சிறார் பாதுகாப்புக்குரிய பாப்பிறை குழு கூறியுள்ளது.

ஆகஸ்ட் 20, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள நீண்ட கடிதத்தில், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் வேதனைகளை அனுபவிக்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2018, 15:25