தேடுதல்

கர்தினால் மஜெல்லா அக்னெலோ கர்தினால் மஜெல்லா அக்னெலோ  

கர்தினால் மஜெல்லா அக்னெலோவின் மறைவிற்குத் திருத்தந்தை இரங்கல்

கர்தினால் Geraldo Majella Agnelo அவர்கள் பிரேசிலின் பாரானா மாநிலத்தில் உள்ள லோண்ட்ரினாவில், ஆகஸ்ட் 26ஆம் தேதி தனது 89ஆவது வயதில் காலமானார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அப்போஸ்தலிக்கப் பேரார்வத்தால் எப்போதும் வழிநடத்தப்பட்டவர் பிரேசில் கர்தினால் Geraldo Majella Agnelo என்றும், இறைவனின் நித்திய இளைப்பாறுதல் அவருக்குக் கிடைக்கப்பெற தான் சிறப்பாக செபிப்பதாகவும் இரங்கல் தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 26 சனிக்கிழமை இரவு பிரேசிலில் மரணமடைந்த 89 வயதான கர்தினால் Geraldo Majella Agnelo அவர்களின் இறப்பிற்குத் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இவ்வாறுக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் அவர் ஆற்றிய முக்கியப் பணிகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.   

சான் சால்வடார் தி பாஹியா பெருநகர பேராயரான கர்தினால் செர்ஜியோ தா ரோச்சாவுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயத்தின் செயலர், Toledo மறைமாவட்ட ஆயர், Londrina உயர்மறைமாவட்ட பேராயர் என பல பொறுப்புக்களின் வழியாக திருஅவைக்கு நீண்ட ஆண்டுகள் அவர் பணியாற்றியதற்காக இறைவனுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கர்தினால் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்கும் நேரத்தில் இறைவன் அவருடைய ஆசீரையும், ஆன்ம இளைப்பாறுதலையும் அளித்து முடிவில்லா நிலைவாழ்விற்கான நம்பிக்கையை அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

கர்தினால் Geraldo Majella Agnelo அவர்கள் பிரேசிலின் பாரானா மாநிலத்தில் உள்ள லோண்ட்ரினாவில், ஆகஸ்ட் 26ஆம் தேதி தனது 89வது வயதில் இறைபதம் சேர்ந்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஆகஸ்ட் 2023, 15:09