தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

நம்பிக்கை அனுபவம் தாழ்மையான இதயங்களை உருவாக்குகின்றது

நம்பிக்கை அனுபவங்கள் தாழ்மைநிறைந்த இதயங்களை உருவாக்குவதுடன் கடவுளுக்கு நமது திறந்த இதயங்களை வெளிப்படுத்துகின்றன : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

​​​​வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள் மற்றும் சிரமங்களை நம்பிக்கையுடன் அனுபவிக்கும்போது, அவைகள் நம் இதயங்களைத் தூய்மைப்படுத்த உதவுகின்றன என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 31, இவ்வெள்ளியன்று வெளியிட்ட தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை அனுபவங்களே தாழ்மை நிறைந்து இதயங்களை உருவாக்குகின்றது என்றும், இதுவே கடவுளுக்கு நமது திறந்த இதயங்களை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார்.

மார்ச் 29, இப்புதன் மாலை சுவாச நோய்த்தொற்று காரணமாக உரோமையுள்ள Gemelli மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வேளை, இந்தக் குறுஞ்செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2023, 13:08