திருத்தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய திருப்பீடச் செய்தி தொடர்பகத்தின் இயக்குனர் Matteo Bruni, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 29, இப்புதனன்று, உரோமையுள்ள Gemelli மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவு நன்றாக உறங்கி ஓய்வு எடுத்ததாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் கூறினார்.
மார்ச் 31, இவ்வியாழன் காலை உணவுக்குப் பிறகு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சில செய்தித்தாள்களைப் படித்துவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தார் என்றும், மதிய உணவிற்கு முன், மருத்துவமனையில் உள்ள ஆலயத்தில் இறைவேண்டலில் பங்குபெற்று நற்கருணை உட்கொண்டார் என்றும் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் சுவாச பிரச்சனைகளால் அவதியுறுவதாகக் கூறிவந்த வேளை, மார்ச் 29, இப்புதன்கிழமை காலை வழக்கம்போல் திருப்பயணிகளுக்குப் புதன் மறைக்கல்வி உரை வழங்கிய பிறகு பிற்பகலில் மருத்துவப் பரிசோதனைக்காக Gemelli மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்