தேடுதல்

இறைவேண்டல் செய்யும் மூதாட்டி இறைவேண்டல் செய்யும் மூதாட்டி   (ANSA)

திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்

திருத்தந்தை : மெசியாவைக் காணவந்த ஞானிகள் போல் நாமும் ஒன்றிப்பை நோக்கிய பாதையில் திருப்பயணிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மெசியாவைக் காணவந்த ஞானிகள் போல் நாமும் ஒன்றிப்பை நோக்கிய பாதையில் திருப்பயணிகள் என தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 18, செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை வெளியிட்ட செய்தியில், 'கிழக்கிலிருந்து மெசியாவை வணங்க பெத்லேகம் நோக்கி வந்த ஞானிகள்போல் கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் மத நம்பிக்கைகள், மற்றும், பாரம்பரியங்களின் வேறுபாடுகளில், முழு ஒன்றிப்பைக் காணும் பாதையில் திருப்பயணிகள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செபித்து, நம் ஒரே ஆண்டவராம் இயேசுவில் நம் பார்வையை நிலை நிறுத்துவோம்’, என்கிறது திருத்தந்தையின் டிவிட்டர் செய்தி.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 18 முதல் 25 வரை திரு அவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், இச்செவ்வாய் முதல் வரும் செவ்வாய் வரை பல்வேறு தலத் திருஅவைகளிலும், தலைமைப்பீடம் இருக்கும் உரோம் நகரிலும் இடம்பெற்று வருகிறது. இறுதி நாளான ஜனவரி 25ம் தேதி மாலை, உரோம் நகர் புனித பவுல் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் இச்செபவார நிறைவு வழிபாடு இடம்பெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2022, 15:10