தேடுதல்

திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை

திறந்த மனமற்ற நிலையையும், மறுதலிப்புகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் கிறிஸ்தவர்களின் பணி தொடர்ந்து நன்மை செய்வதாகவே இருக்கவேண்டும் : திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்-வத்திக்கான்

திறந்த மனமற்ற நிலையையும், மறுதலிப்புகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் கிறிஸ்தவர்களின் பணி தொடர்ந்து நன்மை செய்வதாகவே இருக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் சொந்த இடமாகிய நாசரேத்தில், தன் முதல் போதனையை வழங்கியபோது, மக்களின் எதிர்ப்புணர்வை சந்தித்த இயேசு, ஒவ்வொரு கிறிஸ்தவரும் தாழ்ச்சியுடன் இறைவனின் வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைச் சொல்லித் தருகின்றார் என ஜனவரி 30, ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இயேசுவிடமிருந்து உண்மைகளின் வார்த்தைகளை அல்ல, மாறாக அரும் அடையாளங்களை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இத்தகைய எதிர்பார்ப்பால் இயேசுவின் மீதான வெறுப்பு வெளிப்பட்டதையும், அதுவே இயேசுவை, எந்த இறைவாக்கினரும் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று கூற வைத்ததையும் எடுத்துரைத்தார்.

இயேசுவின் இந்த வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார், இருப்பினும் அவர் போதிக்கச் சென்றது, இறைவன் மனிதன்மீது கொண்டிருந்த அன்பையும், நாம் அவரை ஒதுக்கினாலும் அவர் நம்மை ஒதுக்கிவிடுவதில்லை என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கே என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

வத்தித்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், பிள்ளைகள் தங்களுக்கு எதிராக என்ன செய்தாலும், பெற்றோர்கள் அவர்களை அன்பு செய்வதிலிருந்து விலகுவதில்லை என்பதை எடுத்துரைத்து, பெற்றோரைப்போல் நம்மை அன்புகாட்டும் கடவுளை நம் தினசரி வாழ்வில் நாம் ஏற்றுக்கொள்வோம் என்ற அழைப்பையும் விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2022, 13:30

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >