மொராக்கோ திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை மொராக்கோ திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை 

பெண் திருத்தொண்டர்கள் பற்றி ஆய்வு செய்ய புதிய குழு

கத்தோலிக்கத் திருஅவையில் பெண் திருத்தொண்டர்கள் உருவாக்கப்படுவது குறித்த வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்வதற்கென ஒரு புதிய குழு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில் பெண் திருத்தொண்டர்கள் உருவாக்கப்படுவது குறித்த வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்வதற்கென ஒரு புதிய குழுவும், அதன் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.    

இது குறித்து அறிவித்த திருப்பீட தகவல் தொடர்பகம், திருப்பீட விசுவாசக்கோட்பாட்டு பேராயத் தலைவர் கர்தினால் லூயிஸ் லதாரியா அவர்களை அண்மையில் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இந்த புதிய குழு உருவாக்கப்படுவது குறித்து தீர்மானித்தார் என்று கூறியுள்ளது.

புதிய குழு

தலைவர், இத்தாலியின் அகுய்லா பேராயர் கர்தினால் Giuseppe Petrocchi, செயலர், விசுவாசக் கோட்பாட்டுப் பேராய அலுவலகர் அருள்பணி Denis Dupont-Fauville.

உறுப்பினர்கள்

பேராசிரியர் Catherine Brown Tkacz, Lvov (உக்ரைன்), பேராசிரியர் Dominic Cerrato, Steubenville (அமெரிக்க ஐக்கிய நாடு), பேராசிரியர் அருள்பணி Santiago del Cura Elena, Burgos (இஸ்பெயின்), பேராசிரியர் Caroline Farey, Shrewsbury (பிரிட்டன்), பேராசிரியர் Barbara Hallensleben, Friburgo (சுவிட்சர்லாந்து), பேராசிரியர் அருள்பணி Manfred Hauke, Lugano (சுவீடன்), பேராசிரியர் James Keating, Omaha (அமெரிக்க ஐக்கிய நாடு), பேராசிரியர் பேரருள்திரு Angelo Lameri, Crema (இத்தாலி), பேராசிரியர் Rosalba Manes, Viterbo (இத்தாலி), பேராசிரியர் Anne-Marie Pelletier, பாரிஸ் (பிரான்சிஸ்).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2020, 14:41