தேடுதல்

திருஅவைசார் பணிக்குரிய பாப்பிறை கழக பயிற்சிபெறுவோரை 2015ல் திருத்தந்தை சந்தித்தபோது....... திருஅவைசார் பணிக்குரிய பாப்பிறை கழக பயிற்சிபெறுவோரை 2015ல் திருத்தந்தை சந்தித்தபோது....... 

மறைப்பணித்தளங்களில் பயிற்சி பெறுவது அவசியம்

திருஅவையில், திருப்பீடத் தூதரகப்பணிகளை மேற்கொள்ளவிருப்போர், முதலில் ஏதாவது ஒரு மறைபரப்புப் பணிதளத்தில் ஓராண்டு பணியாற்றுவது அத்தியாவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவையில், திருப்பீடத் தூதரகப்பணிகளை மேற்கொள்ளவிருப்போர், முதலில் ஏதாவது ஒரு மறைபரப்புப் பணிதளத்தில் ஓராண்டு பணியாற்றுவது அத்தியாவசியம் என அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவைசார் பணிக்குரிய பாப்பிறை கழகத்தின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதைக்குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஏற்கனவே அது குறித்து, அமேசான் பகுதியை மையப்படுத்தி நடைபெற்ற ஆயர்களின் சிறப்பு மாமன்றக்கூட்டத்தின் இறுதி உரையில் இக்கருத்தைக் கோடிட்டுக்காட்டியிருந்தார்.

திருப்பீடத்தூதரகப்பணிகளில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வழங்கும் பாப்பிறை கழகத்தின் தலைவர், பேராயர் ஜோசப் மரினோ அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள கடிதத்தில், நாடுகளுடன் உறவுகள் தொடர்புடைய பணிகளில் ஈடுபடவுள்ளோர், மறைப்பணித்தளங்களிலும் பயிற்சி பெறுவது இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் சொந்த மறைமாவட்டத்தில் அல்லாமல், வேறு ஒரு மறைப்பணித்தளத்தில், நற்செய்தி அறிவிப்புப்பணி நடவடிக்கைகளில் பயிற்சி பெறுவது, இன்றையத் திருஅவை  சந்திக்கும் சவால்களை நன்முறையில் எதிர்கொள்ள உதவும் என, அக்கடித்தில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் கல்வியாண்டிலிருந்து, இச்செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2020, 14:50