தேடுதல்

அசிசி நகர் புனித பிரான்சிஸ்  விழா அசிசி நகர் புனித பிரான்சிஸ் விழா 

செப்டம்பர் 1-அக்டோபர் 4, படைப்பின் காலம்

இவ்வெள்ளி மாலையில், வத்திக்கான் பசிலிக்காவில், நான்கு அருள்பணியாளர்களை ஆயர்களாகத் திருப்பொழிவு செய்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் பாதுகாவலில் அர்ப்பணிப்போம் என்று, அக்டோபர் 4, இவ்வெள்ளியன்று, ஹாஸ்டாக் (#SeasonOfCreation) குடன், தன் டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

“படைப்பின் காலம் என்ற நிகழ்வை இன்று நிறைவு செய்கின்ற நாம், அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் பாதுகாவலில் அர்ப்பணிப்போம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று பதிவாகி இருந்தன.

சுற்றுச்சூழலையும், நம் பொதுவான இல்லமாகிய நம் பூமியையும் பாதுகாப்பதற்கு, ஆக்கப்பூர்வமான செயல்களில் கத்தோலிக்கர் இறங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, திருஅவையில் ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அக்டோபர் நான்காம் தேதி வரை, படைப்பின் காலம் என்ற நிகழ்வு சிறப்பிக்கப்படுகின்றது. 

ஆயர் திருநிலைப்பாட்டு திருப்பலி

இன்னும், இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், நான்கு அருள்பணியாளர்களுக்கு ஆயர் திருநிலைப்பாட்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த செப்டம்பர் 3ம் தேதி திருப்பீடத் தூதர்களாக நியமிக்கப்பட்ட, அருள்பணியாளர்கள்  Antoine Camilleri, Paolo Rudelli மற்றும், Paolo Borgia ஆகிய மூவரும், இன்னும், புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, இயேசு சபை அருள்பணி Michael Czerny அவர்களும் ஆயர்களாகத் திருப்பொழிவு செய்யப்படுவர். அருள்பணி Michael Czerny அவர்கள், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் துறையின் நேரடிப் பொதுச் செயலராவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2019, 15:21