சிறைக்கைதிகளை திருத்தந்தை சந்தித்தபோது சிறைக்கைதிகளை திருத்தந்தை சந்தித்தபோது 

மன்னிப்பிலிருந்தே மீண்டும் வாழ்வைத் தொடங்குகிறோம்

கடவுளின் மன்னிப்பை அனுபவிக்கையில், உண்மையிலேயே நாம் மறுபிறப்படைகின்றோம். மன்னிப்பிலிருந்தே நாம் மீண்டும் வாழ்வைத் தொடங்குகிறோம் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம், நமது உண்மையான நிலையை எப்போது கண்டுகொள்கிறோம் என்பதை விளக்கும் டுவிட்டர் செய்தியை, ஆகஸ்ட் 13, இச்செவ்வாயன்று  வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“கடவுளின் மன்னிப்பை அனுபவிக்கையில், நாம் உண்மையிலேயே மறுபிறப்படைகின்றோம். மன்னிப்பிலிருந்தே மீண்டும் வாழ்வைத் தொடங்குகிறோம். நம் பாவங்களை அறிக்கையிடுகையில், நம்மையே நாம் மீண்டும் கண்டுணர்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் செய்தியில் வெளியாயின..

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன், அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 12, இச்செவ்வாய் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,077 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், 2013ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி, இத்தாலியின் லாம்பதூசா தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததன் ஆறாம் ஆண்டு நினைவையொட்டி, திருத்தந்தை  நிறைவேற்றிய திருப்பலியின் புகைப்படங்கள் உட்பட, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 746 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2019, 14:56