புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

Bijnor சீரோ-மலபார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

ஒவ்வொரு நாளும் இயேசுவோடு நாம் கொள்ளும் உறவிலும், அவரின் மன்னிப்பின் சக்தியிலும், நம் வேர்களைக் கண்டறிகிறோம் - திருத்தந்தை

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் மன்னிப்பில் நாம் பெறும் நலன்களை மையப்படுத்தி, ஆகஸ்ட் 30, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“ஒவ்வொரு நாளும் இயேசுவோடு நாம் கொள்ளும் உறவிலும், அவரின் மன்னிப்பின் பலத்திலும், நம் வேர்களைக் கண்டறிகிறோம்” என்ற சொற்களை, ஆகஸ்ட் 30, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில், ஒன்பது மொழிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகள், ஆகஸ்ட் 29, இவ்வியாழன் பதிவுகளில், 2,094 என்பதும், அந்தப் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

திருத்தந்தையின் சந்திப்புகள்

மேலும், திருப்பீடத்திற்கான ஈரான் நாட்டு தூதர் Seyed Taha Hashemi, காஸ்தெல் கந்தோல்ஃபோவில் வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தில் பணியாற்றும் இயேசு சபை குழுவின் 17 பேர், பேராயர் சில்வானோ தொமாசி, தூர்து நகர் திருத்தல அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Antoine Hérouard, திருச்சிலுவை துறவு சபையின் தலைவர் அருள்பணி Joachim Welz ஆகியோரையும், ஆகஸ்ட் 30, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சீரோ-மலபார் மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள்

மேலும், இந்தியாவின் Mandya, Bijnor, மற்றும், ஃபாரிதாபாத், சீரோ-மலபார் மறைமாவட்டங்களுக்கு, ஆயர்களையும், துணை ஆயரையும் ஆகஸ்ட் 30, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளது, சீரோ-மலபார் பேரவை.

சீரோ-மலபார் பேரவை, அருள்பணி Vincent Nellaiparambil அவர்களை, Bijnor சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.  

எர்ணாகுளம்-அங்கமலி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றிய ஆயர் Sebastian Adayanthrath அவர்களை, Mandya மறைமாவட்டத்தின் ஆயராகவும்,  எர்ணாகுளம்-அங்கமலி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றிய ஆயர் Jose Puthenveettil அவர்களை, ஃபாரிதாபாத் மறைமாவட்ட துணை ஆயராகவும் நியமித்துள்ளது, சீரோ-மலபார் பேரவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2019, 15:16