திருத்தந்தையின் டுவிட்டர் - கடவுளின் அன்புப் பிள்ளைகள்
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
நாம் கடவுளின் அன்புப் பிள்ளைகள் என்பதை, நம்மில் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பது, விசுவாசமே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 12, இவ்வெள்ளியன்று வெளியான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், “நாம் கடவுளின் அன்புக் குழந்தைகள் என்பதை, ஆழமான மற்றும் அழகான பற்றுறுதியுடன் வாழச் செய்வது, விசுவாசம் எனும் கொடையே” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.
ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
ஜூலை 11, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,043 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 4 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 738 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்