தேடுதல்

விவிலியம் வழங்கும் திருத்தந்தை விவிலியம் வழங்கும் திருத்தந்தை 

விவிலியம் என்பது வாழ்வின் வார்த்தை - திருத்தந்தை

வாழ்வு என்பது இறைவனின் அருள் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் கொணர்ந்த புதுமையே வாழ்வு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

விவிலியம் என்பது, நாம் விதைக்க வேண்டிய விதைகளைக் கொண்டுள்ள வாழ்வின் வார்த்தை என்ற கருத்தை மையமாக வைத்து இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'அலமாரியில் அடுக்கி வைப்பதற்கான அழகான புத்தகமல்ல விவிலியம். நாம் விதைக்க வேண்டிய வாழ்வின் வார்த்தை இது. உயிர்த்த இயேசுவின் பெயரால் நாம் வாழ்வை பெறும்பொருட்டு நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடையை ஏற்க இயேசு விடும் அழைப்பாகும்' என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'துன்பம் நிறை நாட்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம், ஆனால், வாழ்வு என்பது, இறைவனின் அருள் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் கொணர்ந்த புதுமையே, வாழ்வு' என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2019, 15:47