கர்தினால் José Manuel Estepa Llaurens கர்தினால் José Manuel Estepa Llaurens  

கர்தினால் Llaurens அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

ஸ்பெயின் நாட்டின் கர்தினால் José Manuel Estepa Llaurens அவர்கள், இறையடி சேர்ந்தததையடுத்து, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஸ்பெயின் நாட்டின் கர்தினால் José Manuel Estepa Llaurens அவர்கள், தன் 93வது வயதில் இறையடி சேர்ந்தததையடுத்து, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

கர்தினால் Estepa Llaurens அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய அருள்பணியாளர்கள் அனைவருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களை தன் செய்தியில் வெளியிட்டுள்ள திருத்தந்தை, கர்தினால் Llaurens அவர்களின் ஆன்மா நிறை வாழ்வடைய செபிப்பதாகவும் கூறியுள்ளார்.

1926ம் ஆண்டு புத்தாண்டு நாளான சனவரி 1ம் தேதி, ஸ்பெயின் நாட்டின் Andújar எனுமிடத்தில் பிறந்த கர்தினால் Estepa Llaurens அவர்கள், 1954ம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார். 2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவரை கர்தினாலாக உயர்த்தினார்.

ஜூலை 21, இஞ்ஞாயிறன்று, கர்தினால் Estepa Llaurens அவர்கள், இறையடி சேர்ந்ததையடுத்து, திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை, 218ஆக குறைந்துள்ளது என்பதும், இவர்களில் 120 பேர், திருத்தந்தையைத் தேர்தெடுக்கும் தகுதியுடையவர்கள் என்பதும், 98 பேர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2019, 15:21