திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்  

புனித.திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டு

முடிவற்ற வாழ்விற்கு ஓர் இடத்தை தயாரிக்கிறது திருநற்கருணை, ஏனெனில், அதுவே வானக அப்பம், மற்றும், ஆசீரின் பள்ளி - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

இத்திங்களன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழாவை முன்னிட்டு, அவரின் எடுத்துக்காட்டை முன்வைத்து, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எப்போதும் இறைவார்த்தையின் சேவையில் தன்னை ஈடுபடுத்தியிருக்கும் திருஅவையாக, தனக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இயேசு கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒரு திருஅவையாக, வாழ்வதற்கு புனித திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டு நமக்கு அழைப்புவிடுக்கிறது என, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

மேலும், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழாவை முன்னிட்டு இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், 'முடிவற்ற வாழ்விற்கு ஓர் இடத்தை தயாரிக்கிறது திருநற்கருணை, ஏனெனில், அதுவே வானக அப்பம்', என, அதில் குறிப்பிட்டுள்ளார்.

‘இதமான வார்த்தைகளையோ, சலிப்பைத் தரும் வார்த்தைகளையோ பற்றியதல்ல ஆசீர். அது அன்புடன் கூடியதாகவும், நன்மைத்தனங்கள் பற்றி பேசுவதுமாகும். நற்கருணை என்பது ஆசீரின் பள்ளி' என ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டரில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2019, 16:12