தர்மம் வழங்குவதைக் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தை மையப்படுத்தி வழங்கிவரும் டுவிட்டர் செய்திகளில், ஏப்ரல் 10, இப்புதனன்று, தவக்காலத்தின் ஒரு முக்கிய கடமையான தர்மம் வழங்குவதைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
"நம்முடையது என்று சொல்ல இயலாத எதிர்காலத்தை உறுதி செய்யும் ஒரு மாயை நிலைக்கு உட்பட்டு, அனைத்தையும் நமக்கென திரட்டிக்கொள்ளும் மடமையிலிருந்து நாம் வெளியேறிச் செல்ல, தர்மம் செய்தல் உதவுகிறது" என்ற சொற்களை தன் டுவிட்டர் செய்தியாக வழங்கினார், திருத்தந்தை.
'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, அதாவது, 12-12-12 என்ற சிறப்பு தேதியன்று, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தைத் துவக்கினார்.
ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
ஏப்ரல் 10, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,936 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 80 இலட்சம் என்பதும், குறிப்பிடத்தக்கன.
இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 692 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 60 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்