தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருத்தந்தை திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி  

வரலாற்றின் இருள்படர்ந்த நேரங்களில், ஆண்டவர் அருகில் இருக்கிறார்

ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதிக்கான, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அறக்கட்டளையின் நிர்வாக ஆலோசனை அவையின் ஆண்டு கூட்டம், டாக்கரில் நடைபெற்று வருகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையின் அடிப்படையில் டுவிட்டர் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைத்தந்தையாம் கடவுளின் வேதனயுறும் இதயத்தின் பேருண்மையில் நாம் நுழைவோம் மற்றும், நம் காலத்தில் பல பெருந்துன்பங்களைக் காணும்வேளையில், அவரோடு பேசுவோம் என்ற சொற்கள், பிப்ரவரி 19, இச்செவ்வாயன்று திருத்தந்தையின் டுவிட்டரில் பதிவாகியிருந்தன.

மேலும், நம் வரலாற்றின் இருள்படர்ந்த நேரங்களில், ஆண்டவர் அருகில் இருக்கிறார், பாதைகளைத் திறக்கிறார், தளர்ச்சியுற்ற விசுவாசத்தை தட்டி எழுப்புகிறார், காயமடைந்த நம்பிக்கையை ஆற்றுகிறார், உறக்கநிலையிலுள்ள பிறரன்பை விழித்தெழச் செய்கிறார் என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாய் பிற்பகலில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, பிப்ரவரி 18 இத்திங்கள் முதல், 22 வெள்ளி முடிய, டாக்கரில், சாஹெல் பகுதி குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி வருகின்றது.

ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதிக்கான, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அறக்கட்டளையின் நிர்வாக ஆலோசனை அவையின் ஆண்டு கூட்டத்தை, செனகல் நாட்டின் டாக்கரில் நடத்தி வருகின்றது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2019, 15:26