அரசியல் தூதர்கள் சந்திப்பு அரசியல் தூதர்கள் சந்திப்பு 

கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் மீண்டும் கண்டுகொள்ள

நமக்குரியதை, இறைவனுடனும், பிறருடனும் பகிரும் பண்பை, மனுமகனாம் இயேசுவிடமிருந்து கற்று, அதை உயிருடன் வைத்திருப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மனுமகனைப்போல் நம் வாழ்வை பிறருடன் பகிரும் பண்பை உயிரோட்டமாய் வைத்திருப்போம், என, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியாக எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம் வாழ்வைப் பகிரும்பொருட்டு, இயேசுவில், இறைவன் மனிதனாகப் பிறந்தார். நாம் இந்த உறவை இறைவனுடனும், நம் ஒவ்வொருவருடனும் உயிரோட்டமாக வைத்திருப்போம். கீழை நாடுகளைச் சேர்ந்த நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்' என உரைக்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், திருக்காட்சித் திருவிழாவையொட்டி, திருத்தந்தை இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி, 'கீழ்த்திசையின் மூன்று ஞானிகள், குழந்தை இயேசுவுக்கு தங்களின் மிக உயரிய கொடைகளை வழங்கினார்கள். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் மீண்டும் கண்டுகொள்ள உதவுமாறு இறைவனிடம் இன்று வேண்டுவோம்' என்பதாக இருந்தது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2019, 15:27