தேடுதல்

திருத்தந்தையுடன் Kiko Argüello திருத்தந்தையுடன் Kiko Argüello  

Neocatechumenal Way இயக்கத்தை நிறுவியவர் - திருத்தந்தை வாழ்த்து

"திருஅவைக்காக நீர் ஆற்றிவரும் அனைத்து நன்மைகளுக்கும் இறைவன் உமக்கு சன்மானம் வழங்குவாராக. நான் என் செபத்தின் வழியே உம்மோடு இணைகிறேன்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

Neocatechumenal Way என்ற இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான Kiko Argüello அவர்கள், சனவரி 9, இப்புதனன்று, தன் 80வது பிறந்தநாளை நிறைவு செய்ததையடுத்து, அவருக்கு, தன் வாழ்த்துக்களை, தனிப்பட்ட முறையில் அனுப்பிவைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"திருஅவைக்காக நீர் ஆற்றிவரும் அனைத்து நன்மைகளுக்கும் இறைவன் உமக்கு சன்மானம் வழங்குவாராக. நான் என் செபத்தின் வழியே உம்மோடு இணைகிறேன்" என்ற சொற்களை திருத்தந்தை தன் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

இறைவன் உம்மைத் தெரிவு செய்ததற்காகவும், 80 ஆண்டுகள் உமக்கு அருகில் இருந்ததற்காகவும் நன்றி கூறுகிறேன் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவும், அன்னை மரியாவும், உம்மை ஆசீர்வதித்து, பாதுகாப்பார்களாக என்று இந்த வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார். 

மேலும், சனவரி 8, இச்செவ்வாயன்று, திருத்தந்தை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், Kiko Argüello அவர்களது 80வது பிறந்தநாளைக் குறிப்பிட்டு தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் வாழும் Kiko Argüello அவர்கள், திருத்தந்தைக்கு தன் மனமார்ந்த நன்றியைக் கூறியதோடு, புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தைக்கு தன் அன்பையும், அர்ப்பணத்தையும் தெரிவித்தார்.

1960களில், மத்ரித் புறநகர் பகுதியான Palomeras Altas என்ற இடத்தில் தோன்றிய Neocatechumenal Way என்ற இயக்கம், தற்போது, ஐந்து கண்டங்களில் உள்ள 134 நாடுகளில், ஆயிரக்கணக்கான குழுமங்களாக செயலாற்றி வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2019, 15:47