இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் 31வது நிறையமர்வு ஆண்டு கூட்டம் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் 31வது நிறையமர்வு ஆண்டு கூட்டம் 

இந்திய ஆயர் பேரவை கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவை மேற்கொண்டுள்ள 31வது நிறையமர்வு ஆண்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவை மேற்கொண்டுள்ள 31வது நிறையமர்வு ஆண்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

"இயேசு கிறிஸ்துவை நீங்கள் புத்துணர்வுடன் சந்திக்கவும், அவர் உங்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கவும்" வேண்டுமென்ற அழைப்பை, தன் சகோதர ஆயர்களுக்கு முன்வைப்பதாக, திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

இறைமக்களுக்கு வழங்கப்படும் பணிகளில் வெளிப்படவேண்டிய அக்கறையுடன், அம்மக்களை, நம்பிக்கையிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்த, ஆயர்கள் மேற்கொண்டுவரும் பகிர்வுகள் அமையவேண்டும் என்ற கருத்துக்காக தான் செபித்து வருவதாக, திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

'நற்செய்தியின் மகிழ்வு' என்ற மையக்கருத்துடன், சென்னைக்கருகே மாமல்லபுரத்தில் சனவரி 7ம் தேதி துவங்கியிருக்கும் இக்கூட்டத்திற்கு, கர்தினால் பரோலின் அவர்கள், இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2019, 15:31