தேடுதல்

ஆசீர் வழங்கும் திருத்தந்தை ஆசீர் வழங்கும் திருத்தந்தை 

இறைக் கருணை, மக்களைச் சென்றடைய நம் உதவி

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மக்களிடம், இறைவனின் கருணை, நம் வழியாகச் சென்றடைய வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இறை இரக்கத்தினை எடுத்துச் செல்ல வேண்டிய நம் கடமையை வலியுறுத்தி இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இறைவனின் மென்மையையும், கருணையையும் எடுத்துச் செல்லுங்கள்'  என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இதற்கிடையே, கானடா நாட்டு மக்களுக்கென தனிப்பட்ட முறையில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை, காணொளிச் செய்தியாக அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Salt and Light என்ற கத்தோலிக்க சமூகத்தொடர்பு நிறுவனத்தால் திருத்தந்தையின் தாய் மொழியான இஸ்பானியத்தில் பதிவுச் செய்யப்படுள்ள இந்தக் காணொளி, ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2018, 15:39