தேடுதல்

திருநற்கருணை வழங்குதல் திருநற்கருணை வழங்குதல் 

இறைவனின் பிரசன்னத்தைக் குறிக்கும் நற்கருணைக் கொண்டாட்டம்

ஆயர்கள், பணிவு, மென்மை ஆகிய பண்புகள் கொண்டவராக இருக்கவேண்டும் என்று இந்நாளில் வேண்டிக்கொள்வோம் - டுவிட்டர் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயர்கள் கொண்டிருக்கவேண்டிய பண்புகள் குறித்து தன் மறையுரையில் கூறிய ஒரு கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டுள்ளார்.

"புனித பவுல் கூறியபடி, ஆயராகப் பொறுப்பேற்றுள்ளவர், பணிவு, மென்மை ஆகிய பண்புகள் கொண்டவராக இருக்கவேண்டும் என்று இந்நாளில் வேண்டிக்கொள்வோம்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “நம்மிடையே, நமக்காக இருக்கும் இறைவனின் வாழும் பிரசன்னத்தைக் குறிக்கும் திருநற்கருணைக் கொண்டாட்டத்தால் புனிதமடைந்துள்ள ஞாயிறு, நமக்கு புனிதமான நாளாகும்” என எழுதியுள்ளார்.

மேலும், சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் விளங்கும் சுழற்சி முறையின் அடிப்படையில், தற்போது, தலைமைப் பதவி வகிக்கும் இவ்வாண்டு தலைவர் Alain Berset அவர்களை, நவம்பர் 12, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதே நாளில், தங்கள் ‘அத் லிமினா’ சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த குரோவேஷியா நாட்டு ஆயர்களையும், திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2018, 15:24