தேடுதல்

திருத்தந்தை முதலாம் ஜான் பால் கல்லறை முன் திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை முதலாம் ஜான் பால் கல்லறை முன் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவன் மீதான நம் விசுவாசம், நங்கூரம் போன்றது

முன்னாள் திருத்தந்தையர்களின் கல்லறைகளை சந்தித்து, அமைதியில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவரில் நாம்  கொண்டுள்ள விசுவாசம், வானுலகில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நங்கூரம் போன்றது' என இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இச்சனிக்கிழமையன்று, இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் திருநாளையொட்டி உரோம் நகரின் லவுரந்தீனோ கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று, விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து வத்திக்கான் திரும்பியவுடன், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராயலயத்திற்கு கீழேயுள்ள முன்னாள் திருத்தந்தையர்களின் கல்லறைகளை தரிசித்து, சிறிது நேரம் அமைதியில் செபித்தார்.

மேலும், இச்சனிக்கிழமையன்று, காலையில் உரோம் நகரின் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் இறையடியார் கிலேலியா மெர்லோனி அவர்களை அருளாளராக அறிவித்து, திருப்பலியை நிறைவேற்றினார், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ பெச்சியு.

இத்தாலியில் 1861ம் ஆண்டு பிறந்து, இயேசுவின் திரு இதய அப்போஸ்தலர்கள் என்ற துறவு சபையை தோற்றுவித்து, பணியாற்றி, தன் 69ம் வயதில் இறையடி சேர்ந்த அருள்சகோதரி, இறையடியார் மெர்லோனி அவர்கள், இச்சனிக்கிழமையன்று, அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2018, 16:27