எதனாலும் இறைவனின் செயல்பாட்டை தடை செய்ய முடியாது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
“எல்லாச் சூழல்களிலும், வெளிப்படையான தோல்வியின் மத்தியிலும் கூட இறைவனால் செயல்பட முடியும்” என்ற சொற்களில், இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்சனிக்கிழமையன்று, வியட்நாம் சோசலிச குடியரசின் துணைப் பிரதமர் Truong Hoa Binh அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இதே நாளன்று, திருப்பீடத்திற்கான நெதர்லாந்து தூதர் Caroline Weijers அவர்களும் திருத்தந்தையை சந்தித்து, தன் நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்