நேர்காணல் – உலக மறைபரப்பு ஞாயிறு – அ.பணி.ரொசாரியோ SMA
மேரி தெரேசா - வத்திக்கான்
அக்டோபர் 21, வருகிற ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் உலக மறைபரப்பு ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது. அஞ்ஞாயிறுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வத்திக்கானில் இளையோரை மையப்படுத்தி உலக ஆயர்கள் மாமன்றம் (அக்.3-28) நடைபெற்றுவரும் இந்நாள்களில், திருத்தந்தையின் செய்தியும் இளையோரை மையப்படுத்தியே உள்ளது. இச்செய்தியின் சுருக்கத்தை இன்று நமக்கு வழங்குகிறார், அ.பணி. முனைவர் பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள். SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையைச் சார்ந்த இவர், அச்சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர். எகிப்து, நைஜீரியா, ஐவரி கோஸ்ட் போன்ற ஆப்ரிக்க நாடுகளில் இறையியல் கற்று, அந்நாடுகளில் மறைப்பணியும் ஆற்றியிருக்கிறார் அ.பணி.ரொசாரியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்