தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை 

அமைதியை வழங்கி, நம் சுதந்திரத்தை வழிநடத்தும் இறைவன்

இறைவன் நமக்கு அன்பை கொடையாக வழங்குகிறார். சுதந்திரத்தை நோக்கி வழி காட்டி அவ்வழியிலேயே நடத்திச் செல்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உணமையில் அமைதி என்பது இறைவனின் கொடை என்ற கருத்தை மையமாக வைத்து,  இத்திங்கள் தின டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'உண்மை அமைதி என்பது கடவுளின் கொடை. அது, குணம்பெற்ற மற்றும் ஒப்புரவடைந்த இதயங்களிலிருந்து ஊற்றெடுத்து, உலகம் முழுமையையும் நோக்கி கரம் நீட்டி அரவணைக்கிறது என, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நம் சுதந்திரத்தை வழி நடத்தி, அழைத்துச் செல்லும் வலிமையாக, கடவுளின் அன்பு, மேலும் மேலும் மாறுவதாக' என எழுதியுள்ளார்.

இதற்கிடையே, இத்திங்களன்று, தங்கள் அத் லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த சூடான் மற்றும் தென் சூடான் ஆயர்களை  திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2018, 16:28