தேடுதல்

கத்தோலிக்க பிறரன்பு பணிகளால் பயனடைந்தோரைச் சந்தித்த திருத்தந்தை கத்தோலிக்க பிறரன்பு பணிகளால் பயனடைந்தோரைச் சந்தித்த திருத்தந்தை 

பிறரன்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோரைச் சந்தித்த திருத்தந்தை

அனைவரையும் வரவேற்று, அவர்களை ஒரு குடும்பமாக உருவாக்க நீங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர், சகோதரிகளே, நீங்கள் அளித்த வரவேற்பிற்கும், உங்கள் சாட்சியப் பகிர்வுகளுக்கும் நன்றி. மரீனா, உங்களையும், உங்கள் கணவரையும் பாராட்டுகிறேன். ஒன்பது குழந்தைகளின் பெற்றோராகிய நீங்கள், அக்குழந்தைகளை வளர்ப்பதில் அடைந்த இன்னல்களைப் பற்றி கூறினீர்கள். அதேவேளை, அவர்கள் வழியே நீங்கள் பெற்ற மகிழ்வையும், நம்பிக்கையையும் கூறினீர்கள். குளிர்காலத்தில் மிக அதிகமான குளிரை உணரக்கூடிய உங்கள் நாட்டில், குடும்பங்கள் வழங்கக்கூடிய கதகதப்பு, சுகமானது. நீங்களும், ஏனைய சகோதரிகளும் இணைந்து, இந்நகரின் பல பகுதிகளுக்கும் சென்று, பரந்துவிரிந்த ஒரு குடும்பத்தை உருவாக்க முயல்வது மிக உன்னத முயற்சி.

விளாடிமிர் அவர்களும், உறவுகளை உருவாக்க, உறுதிப்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பேசினார். அனைத்து உயிர்களும் முக்கியமானவை, எனவே, அவற்றைக் காப்பதற்கு, எத்தகைய சவால்களையும் ஏற்க நீங்கள் தயாராக இருப்பதை பாராட்டுகிறேன்.

அனைவரையும் வரவேற்று, அவர்களை ஒரு குடும்பமாக உருவாக்க நீங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக! எனக்காக வேண்டிக்கொள்ள மறவாதீர்கள்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2018, 14:44