ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு 

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்புக்கு செய்தி

செப்டம்பர் 13, இவ்வியாழனன்று போலந்து நாட்டின் Poznan நகரில் தொடங்கியுள்ள, CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் கூட்டம், செப்டம்பர் 16 வருகிற ஞாயிறன்று நிறைவடையும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பாவின் ஒன்றிப்புக்கு, கிறிஸ்தவ விசுவாசம் ஆற்றியுள்ள முக்கிய பங்களிப்பை இளையோர் கண்டுணர்வதற்கு உதவுமாறு, ஐரோப்பிய ஆயர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து நாட்டில் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு நடத்திவரும் கூட்டத்திற்கு, திருத்தந்தையின் பெயரில் செய்தி அனுப்பியுள்ள, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் இக்கூட்டம், திருஅவையின் மறைப்பணிக்கு, குறிப்பாக, இளையோர்க்கு ஆற்றும் மறைப்பணிக்கு, மென்மேலும் உந்துதல் அளிக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பாவின் எண்ணங்கள், கலை மற்றும் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ள ஆன்மீக விழுமியங்கள், மீண்டும் கண்டுணரப்படுவதற்கு, மேய்ப்புப்பணியில், உடன்பிறப்பு உணர்வுடன், மனத்தாராளமும், தோழமையும் கொண்ட ஒத்துழைப்பு வழங்கப்படுமாறும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2018, 16:40