இளையோர் பற்றிய மாமன்ற தயாரிப்பு கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் இளையோர் பற்றிய மாமன்ற தயாரிப்பு கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

பெருஜியா, உரோமையில் இளையோர் நிகழ்வுகள்

வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, இத்தாலிய இளையோரின் அண்மைத் தயாரிப்புக்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இயேசு வெளிப்படுத்தும் கடவுளின் திருமுகம், அன்பு நிறைந்தது என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டன.

மேலும், “இளையோர், விசுவாசம் மற்றும் அழைத்தலை தெளிந்து தேர்தல்” என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல், 28ம் தேதி வரை, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, இத்தாலிய இளையோர் ஆகஸ்ட் 8, இப்புதன் முதல் இரு பெரிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை பெருஜியாவிலும், ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் உரோம் நகரிலும் இந்நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இந்த இளையோர் நிகழ்வுகளில், இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அருங்கொடை இயக்கத்திலிருந்தும் இளையோர் கலந்துகொள்வர்.

ஆகஸ்ட் 11ம் தேதி மாலையில் உரோமையில் நடைபெறவிருக்கும் இளையோரின் செப வழிபாட்டில் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 12ம் தேதி நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், மூவேளை செப உரையாற்றுவார்.

இத்தாலியில் அருங்கொடை இயக்கத்தில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், 1,900 குழுக்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2018, 15:33