தேடுதல்

புனித மரிய வியான்னி அருளப்பர் புனித மரிய வியான்னி அருளப்பர்  (Joachim Schäfer - Ökumenisches Heiligenlexikon)

அருள்பணியாளர்களுக்கு அன்பாதரவு காட்டுங்கள்

அருள்பணியாளர்களின் பாதுகாவலர் புனித மரிய வியான்னி அவர்களை, 1925ம் ஆண்டில், புனிதராகவும், 1929ம் ஆண்டில் பங்குத்தந்தையரின் பாதுகாவலராகவும் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் அறிவித்தார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உங்கள் அருள்பணியாளர்களுக்கு, நட்பு மற்றும் பாசத்துடன், ஆதரவு அளியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

புனித மரிய வியான்னி அருளப்பர் அவர்களின் விழாவாகிய ஆகஸ்ட் 04, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அருள்பணியாளர்களுக்கு, நட்புடன் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 1786ம் ஆண்டில் பிறந்த புனித மரிய வியான்னி அவர்கள், 1815ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். ஆர்ஸ் என்ற சிறிய ஊரின் பங்குத்தந்தையாக, மறைப்பணியை ஆரம்பித்த இவர், ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 16 மணி நேரங்கள் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார். இந்த அருளடையாளத்தைப் பெறுவதற்கு விசுவாசிகள் எந்த நேரத்தில் வந்தாலும், அயராது அதை நிறைவேற்றினார். இப்புனிதர் இறந்த நூறாம் ஆண்டு நினைவாக, 1959ம் ஆண்டில், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், புனித மரிய வியான்னி அவர்களின் புனித வாழ்வை மையப்படுத்தி, Sacerdotii nostri primordia எனப்படும் திருமடலை வெளியிட்டு, இப்புனிதர், அருள்பணியாளர்களின் புனித வாழ்வுக்கு எடுத்துக்காட்டு என அறிவித்தார்

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2018, 15:40