திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

பிட்கப்பட்டு பகிரப்பட வேண்டியது கிறிஸ்தவ வாழ்வு

பிறருக்காக நொறுக்கப்படவும் நாம் முன்வரவேண்டும் என்பதே திருநற்கருணையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருநற்கருணையைப் போல், நம் வாழ்வும்  உடைக்கப்பட்டு பிறருடன் பகிரப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'திருநற்கருணை எனும் கொடைக்கு நன்றி சொல்வோம், நம் வாழ்வும் உடைக்கப்பட்டு நம் சகோதர சகோதரிகளுக்கு பயனுடையதாக பகிரப்பட வேண்டும்' என அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 12, இஞ்ஞாயிறு முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.651 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 77 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

12-12-12 என்ற சிறப்பான எண்கள் கொண்ட நாளன்று, அதாவது, 2012ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்களால் டுவிட்டர் செய்திகள் துவங்கப்பட்டன.

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2018, 16:31