தேடுதல்

புனித பேதுரு வளாகத்தில் செபிக்கும் திருத்தந்தை புனித பேதுரு வளாகத்தில் செபிக்கும் திருத்தந்தை 

2020 திருத்தந்தையின் செபக்கருத்துக்களுக்கு ஆலோசனைகள்

2020ம் ஆண்டில் திருத்தந்தை வெளியிடவிருக்கும் மாத செபக்கருத்துக்களுக்கு விசுவாசிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை அறிவிக்கும் செபக்கருத்துக்களை ஒருங்கிணைக்கும் இயேசு சபை தலைமை அலுவலகம், 2020ம் ஆண்டு, திருத்தந்தையின் செபக்கருத்துக்கள் குறித்து, விசுவாசிகளின் ஆலோசனைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

'செபத்தின் திருத்தூதுப்பணி' என்ற பெயரில் இயங்கி வரும் இயேசு சபையினரின் ஓர் அமைப்பு, ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை வெளியிடும் செபக்கருத்துக்களை உலகிற்கு அறிவித்து வருகிறது.

2019ம் ஆண்டுக்குரிய கருத்துக்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், 2020ம் ஆண்டில் திருத்தந்தை எந்தெந்த கருத்துக்காக செபிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை மக்கள் வழங்குமாறு, இவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள், விசுவாசிகள் அளிக்கும் கருத்துக்கள் திரட்டப்பட்டு, அவை, தலைமையகத்தில் தெரிவு செய்யப்படும் என்றும், பின்னர், அக்கருத்துக்கள் வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ளோரின் தெரிவுகளுக்கு பின்னர், இறுதியில் திருத்தந்தையால் முடிவு செய்யப்படும் என்றும் திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் கூறியுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2018, 15:50