தேடுதல்

சாந்தா மார்த்தா திருப்பலி - 070119 சாந்தா மார்த்தா திருப்பலி - 070119  (Vatican Media)

கிறிஸ்தவ வாழ்வை வரையறுக்கும் அளவுகோல்

இயேசு கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கை கொண்டு, ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்வதே, கிறிஸ்தவ வாழ்வின் திறவுகோல் – திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுளின் கட்டளைகள், வெறும் அழகான சொற்கள் அல்ல, மாறாக, அவை கிறிஸ்தவ வாழ்வை வரையறுக்கும் அளவுகோல்களாக விளங்கும் உண்மை நிலைகள் என்று, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்மஸ் விடுமுறை காலத்திற்குப்பின், இத்திங்கள் காலை, தன் உறைவிடமான சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வை வரையறுக்கும் அளவு கோல்களுடன் செயல்பட, நம் ஒவ்வொருவருக்கும் புனிதர்கள் வழிகாட்டுகின்றனர் என்று கூறினார்.

இயேசு கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கை கொண்டு, ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்வதே, கிறிஸ்தவ வாழ்வின் திறவுகோல் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு கிறிஸ்தவரின் வாழ்வு, அடிப்படையில், இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையில் உறுதியாக இருப்பதும், பிறரன்பு செயல்களில் ஈடுபடுவதும் என்று கூறினார்.

கிறிஸ்தவ வாழ்வில் போலி இறைவாக்கினர்கள் நுழைந்து, தவறான வழிகளில் நம்மை இட்டுச்செல்லும் சோதனை இருப்பதால், நாம் ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழவேண்டும் என்ற அவசியத்தையும், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை.

நாம் நல்வழிகளைத் தெரிந்துகொள்ள, இறைமக்கள், திருஅவை, நம் சகோதரர், சகோதரிகள் ஆகியோர், உதவமுடியும் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2019, 15:08
அனைத்தையும் படிக்கவும் >