பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர்–பகுதி 1
மேரி தெரேசா: வத்திக்கான்
பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் நன்மதிப்பிற்குரிய புதிய பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்தவர். இவர், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர், 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 13 ஆண்டுகள் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மார்ச் 19ம் தேதி பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, நியமித்தார். பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம். 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. 1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைவட்டமாக அறிவிக்கப்பட்ட இது 1886ம் ஆண்டில், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. பேராயர் கலிஸ்ட் அவர்கள், இவ்வாண்டு மே 15ம் தேதி, மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்ட நிகழ்வுக்கு உரோம் நகருக்கு வந்திருந்தபோது, வத்திக்கான் வானொலி நேயர்களுக்கென்று வழங்கிய நேர்காணலின் முதல் பகுதி...
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்