தேடுதல்

ஹாங்காக்கில் பாலியல் கல்வி வழங்கப்படுகிறது ஹாங்காக்கில் பாலியல் கல்வி வழங்கப்படுகிறது 

மகிழ்வின் மந்திரம்: பாலியல் கல்வி வழங்குவதில் கவனம்

சிறாரும், இளையோரும் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதை மனதில் இருத்தி, அவர்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 7ம் பிரிவில், 'குடும்பத்தில் பாலியல் கல்வி வழங்கப்படவேண்டியதன் அவசியம்' பற்றி, 280ம் பத்தி முதல் 7 பத்திகளில்  எடுத்துரைத்துள்ளார். 281ம் பத்தியில் திருத்தந்தை பதிவுசெய்துள்ள சிந்தனைகளின் சுருக்கம் இதோ...

சிறாரும், இளையோரும் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதை மனதில் இருத்தி, அவர்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்கவேண்டும். பாலியல் கல்வி குறித்த  தகவல், சரியான காலத்திலும், பிள்ளைகளின் வயதிற்குத் தகுந்த முறையிலும் அளிக்கப்படவேண்டும். பாலுணர்வை அதிகமாகத் தூண்டுகின்ற மற்றும், சிதைக்கின்ற நூல்கள், இதழ்கள், புகைப்படங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், ஒளிக்காட்சிகள்.... போன்றவை பற்றிய புதிய கருத்தியல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றை விமர்சனக் கண்ணோட்டத்தோடு நோக்குவதற்கு உதவிகள் ஆற்றப்படவேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லையெனில், அவர்களுக்கு வழங்கப்படும் பாலியல் கல்வி குறித்த தகவல்கள் பயனற்றுப் போகும். பாலியல் பற்றி, சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வழிகளில், தாங்கள் பெறுகின்ற எண்ணற்ற செய்திகள், தங்கள் வளர்ச்சிக்கு பயனற்றவை என்பதை இளையோர் உணரச் செய்வது அவசியம். அன்புகூர்வதற்கு அவர்களுக்கு இருக்கும் சக்தியை முடக்கிப்போடும் பொருள்களைத் தவிர்க்கவும், அதேநேரம், நல்ல நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவற்றை ஏற்கவும், அவற்றைத் தேடவும் அவர்களுக்கு உதவிகள் ஆற்றப்படவேண்டும். சிறார், மற்றும், வளர்இளம்பருவத்தினரிடம் பாலுணர்வு குறித்துப் பேசும்போது புதியதொரு மற்றும், சரியான மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்பது, வயது வந்தோருக்குத் தெரிந்திருக்கவேண்டும். (அன்பின் மகிழ்வு 281)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2021, 14:17