நேர்காணல்: செபமாலை பக்திமுயற்சியின் வரலாறு பகுதி 1
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகெங்கும், குறிப்பாக, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் மக்கள் கொத்து கொத்தாக இறந்துகொண்டிருந்தாலும், அதிலிருந்து நலம் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இந்த பெருந்தொற்று ஒழியுமாறு, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், சிறப்பாக செபமாலை செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று, கத்தோலிக்கர் அனைவரும், இம்மாதத்தில் செபமாலை பக்திமுயற்சியை உருக்கமாகச் செபித்து வருகின்றனர். இச்சூழலில், செபமாலை பக்திமுயற்சியின் வரலாற்றுப் பின்னணி, செபமாலையின் முக்கியத்துவம் பற்றி இன்று நமக்கு விளக்குகிறார், மரியின் ஊழியர் சபையின் அருள்பணி முனைவர் டென்னிஸ். இவர், மரியாணும் எனப்படும், உரோம் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவராவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்