நேர்காணல்: UAPA சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்
மேரி தெரேசா: வத்திக்கான்
83 வயது நிறைந்த, உடல் நடுக்க நோயால் துன்புறும் இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் உட்பட, 16 மனித உரிமை ஆர்வலர்கள் பீமா கோரியகான் வழக்கில் பதிவு செய்யப்பட்டு நூறு நாள்களுக்குமேல் சிறையில் உள்ளனர். இவர்களோடு மேலும் பல மனித உரிமை ஆர்வலர்களும், ஆளுமைகளும் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும், UAPA எனப்படும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் உள்ளனர். UAPA சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புத் திருத்தச் சட்டம் 2019 பற்றி, வழக்கறிஞரான, இயேசு சபை அருள்பணி சகாய பிலோமின் ராஜ் அவர்கள், இயேசு சபையினரின் மதுரை லொயோலா வெப் டிவி வழியாக விளக்குகிறார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்