நேர்காணல்: ஈராண்டு பிணையலில் இருந்த ஓர் அருள்பணியாளர் பற்றி..
மேரி தெரேசா: வத்திக்கான்
SMA எனப்படும் ஆப்ரிக்க மறைப்பணி சபையைச் சார்ந்த, அருள்பணி PierLuigi Maccalli அவர்கள், ஆப்ரிக்காவின் நைஜர் நாட்டில் ஒதுக்குப்புறமான கிராமம் ஒன்றில் மறைப்பணியாற்றிவந்த சமயத்தில், 2018ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இரவு, தீவிரவாதக் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டார். அவர், 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இத்தாலியரான அருள்பணி PierLuigi Maccalli அவர்கள், அண்மையில் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்துப் பேசினார். அருள்பணி Maccalli அவர்கள் பற்றி இன்று பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி பிரான்சிஸ் ரொசாரியோ. இவர், அச்சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்