இந்தியாவில் தொழில் கல்வி இந்தியாவில் தொழில் கல்வி 

சிறுபான்மையினரும், இந்திய புதிய தேசிய கல்விக் கொள்கையும்

இந்திய புதிய தேசிய கல்விக் கொள்கை 2019, முன்வைத்துள்ள பரிந்துரைகள், அதனால் உருவாகப் போகும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்திய நடுவண் அரசு புதிய தேசிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவைத், தயாரித்து கடந்த ஜூலை மாத இறுதிக்குள் அது குறித்து கருத்து கேட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2019, முன்வைத்துள்ள பரிந்துரைகள், அதனால் உருவாகப் போகும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றும் அருள்பணி சேவியர் அருள்ராஜ் அவர்களை தொலைபேசியில் அழைத்து, வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு, இக்கல்வி கொள்கை பற்றி கேட்டோம். இக்கல்வி கொள்கை பற்றி, வழக்கறிஞர் அருள்பணி சேவியர் அருள்ராஜ் அவர்களின் கருத்துப் பகிர்வைக் கடந்த வார நிகழ்ச்சியில் வழங்கினோம். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏழைகள் மீது, அக்கல்விக் கொள்கை ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் பற்றி அவர் கூறியதை இன்று வழங்குகின்றோம்

சிறுபான்மையினரும், இந்திய புதிய தேசிய கல்விக் கொள்கையும்

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2019, 15:49