மெக்சிகோ நாட்டின் கர்தினால் Sergio Obeso Rivera மெக்சிகோ நாட்டின் கர்தினால் Sergio Obeso Rivera 

65 ஆண்டுகள் அருள்பணியாளராக பணியாற்றிய கர்தினால் மறைவு

65 ஆண்டுகள் அருள்பணியாளராகவும், 48 ஆண்டுகள் ஆயராகவும் பணியாற்றி, இறையடி சேர்ந்துள்ள Sergio Obeso Rivera அவர்களை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, கர்தினால் நிலைக்கு உயர்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 11, இஞ்ஞாயிறன்று மாலை இறைபதம் சேர்ந்தார், 86 வயது நிரம்பிய, மெக்சிகோ நாட்டின் கர்தினால் Sergio Obeso Rivera.

மெக்சிகோவின் Jalapa நகர் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Sergio Obeso Rivera  அவர்களின் அடக்கத் திருப்பலி, Jalapa பேராலயத்தில் ஆகஸ்ட் 13, இச்செவ்வாய் நண்பகலில் நிறைவேற்றப்பட்டு, அப்பேராலயத்திலேயே அவர் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

65 ஆண்டுகள் அருள்பணியாளராகவும், 48 ஆண்டுகள் ஆயராகவும் பணியாற்றியபின் இறைபதம் எய்தியுள்ள இவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி கர்தினால் நிலைக்கு உயர்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவரின் மரணத்துடன், திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை 216 ஆக குறைந்துள்ளது. இதில், 97 பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2019, 15:49