நேர்காணல் – மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் நைஜீரியர்கள்
மேரி தெரேசா - வத்திக்கான்
நல்லதொரு வாழ்வைத் தேடி ஐரோப்பா செல்ல விரும்பும் நைஜீரிய நாட்டு மக்களில் பலர், மனித வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு, துன்புறும் நிலை பற்றி விளக்கும், ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து, அதனை குறுந்தகடில் வெளியிட்டுள்ளார், ஆப்ரிக்க மறைபரப்பு சபையின் அருள்பணி முனைவர் பிரான்சிஸ் ரொசாரியோ. “எவ்வளவு?” என்ற தலைப்பிலான இந்த ஆவணப் படத்தில், அந்த மக்கள் நைஜீரியாவிலிருந்து பயணம் மேற்கொள்ளும்போது, ஐந்து கட்டங்களில் இன்னல்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அதில் முதல் இரண்டு நிலைகள் பற்றி அருள்பணி ரொசாரியோ அவர்கள் கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து இன்று..[ Audio Embed நேர்காணல் – மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் நைஜீரியர்கள் ]
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்