2,00,000 மௌன நிமிடங்கள் வழியே திரட்டப்பட்டுள்ள நிதி
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இங்கிலாந்தில் உள்ள பங்குத்தளங்கள், பள்ளிகள், மற்றும் இளையோர் அமைப்புக்கள் இணைந்து, Million Minutes' 'siLENT' அதாவது, 'பத்து இலட்சம் நிமிடங்கள் அமைதி-தவக்காலம்' என்ற முயற்சியை இத்தவக்காலத்தில் மேற்கொண்டு வருகின்றன என்று, ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு தவக்காலத்தில், இளையோர், மௌனமான பல நிமிடங்களைக் கடைப்பிடித்து, அதன் வழியே திரட்டும் நிதியை, குரல் எழுப்ப இயலாத இளையோருக்கு வழங்குவது இம்முயற்சியின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும், பல நாடுகளில், இளையோரின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இம்முயற்சியில், இதுவரை, ஏறத்தாழ 2,00,000 மௌன நிமிடங்கள் வழியே நிதி திரட்டப்பட்டுள்ளது என்று இவ்வமைப்பினர் கூறினர்.
Million Minutes' 'siLENT' என்ற இந்த முயற்சி, தவக்காலத்தையும் தாண்டி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்