தேடுதல்

"கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது" (உரோமையர் 8:19) - திருத்தந்தையின் தவக்காலச் செய்தி "கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது" (உரோமையர் 8:19) - திருத்தந்தையின் தவக்காலச் செய்தி 

பூமியில் புதுமை - "படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது"

தவக்காலத்திற்கென்று திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, தவக்காலத்தையும், படைப்பையும், சுற்றுச்சூழலையும் இணைத்து, கருத்துக்களை வழங்கியுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

"நாம் கடவுளின் குழந்தைகளாக வாழ்வதற்கு தவறும்போது, நமது அயலவரையும் ஏனைய படைப்புக்களையும் அழிக்கும் வண்ணம் நாம் நடந்துகொள்கிறோம். அனைத்தையும், நம் மனம் போன போக்கில் பயன்படுத்தமுடியும் என்று எண்ணும்போது, நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம்" என்ற எச்சரிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு வெளியிட்டுள்ள தவக்காலச் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

மார்ச் 6, இப்புதனன்று நாம் துவங்கியுள்ள தவக்காலத்திற்கென்று திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, தவக்காலத்தையும், படைப்பையும், சுற்றுச்சூழலையும் இணைத்து, கருத்துக்களை வழங்கியுள்ளது. "கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது" (உரோமையர் 8:19) என்ற விவிலியக் கூற்றை தலைப்பாகக் கொண்டுள்ள இச்செய்தி, படைப்பின் மீட்பு, பாவத்தின் அழிவு சக்தி, மனவருத்தம் மற்றும் மன்னிப்பின் நலமளிக்கும் சக்தி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

இம்மூன்று பகுதிகளில், 'பாவத்தின் அழிவு சக்தி' என்ற பகுதியில், பாவத்தின் காரணமாக, படைப்பின் மீது மனிதர்கள் கொணரும் அழிவுகளைக் குறித்து, திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களில் ஒரு சில இதோ:

"பாவத்தினால், இறைவனோடு கொண்டுள்ள உறவில் விரிசல் ஏற்படுவதுபோல், சுற்றுச்சூழலுடன் நாம் கொள்ளவேண்டிய உறவிலும் விரிசல் உருவாகும்போது, பூங்கா, புதர் மண்டிக்கிடக்கும் காடாக மாறுகிறது. (காண்க. தொ.நூ. 3:17-18)

"படைப்பின் கடவுளாக, மனிதர், தங்களையேக் காணும் வண்ணம், பாவம் அவர்களை வழி நடத்துகிறது. இதனால், படைப்பின் முழுமையான அதிகாரம் தங்களுக்கு உண்டு என்ற எண்ணத்தில், படைப்பனைத்தையும் தங்களது சுயநலனுக்கென மனிதர் பயன்படுத்துகின்றனர்.

"அன்பை அடிப்படையாகக் கொண்ட இறைவனின் சட்டத்தை, மனிதர் கைவிடும்போது, வலுவற்றோர் மீது வலிமை கொண்டோரின் சட்டம் வெளிப்படுகிறது. இது, படைப்பையும், பிறரையும், சுற்றுச்சூழலையும் சுரண்டுவதற்கு மனிதரை இட்டுச் செல்கிறது."

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2019, 14:39