நேர்காணல் – இயற்கை மருத்துவம் - சகோ.ஆனி கிறிஸ்டினா
மேரி தெரேசா - வத்திக்கான்
திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள், முடநீக்கியல் மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும், நாடி மருத்துவத்தால், நம்பிக்கையிழந்த பலருக்கு மறுவாழ்வளித்தவர். இச்சகோதரி தனது மருத்துவ அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டதன் சுருக்கத்தை, இரு பகுதிகளாக, கடந்த இரு வாரங்களாக வழங்கினோம். இயற்கை மருத்துவம், இயற்கை உணவு பற்றியும் அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள் பகிர்ந்துகொண்டதையும், சுருக்கமாக வழங்குகின்றோம். அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள், கடந்த அக்டோபர் 5ம் தேதியன்று, எவரும் எதிர்பாராதவேளையில், இவ்வுலகுக்குப் பிரியாவிடை கொடுத்து இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆன்மா நிறைசாந்தி அடைய செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்