தேடுதல்

புனிதர்களாக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர்களான பேராயர் ரொமேரோவும், திருத்தந்தை 6ம் பவுலும் புனிதர்களாக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர்களான பேராயர் ரொமேரோவும், திருத்தந்தை 6ம் பவுலும் 

புதிய புனிதர்களுக்கு காரித்தாஸின் சிறப்பு நிகழ்வு

அக்டோபர் 14, நடைபெறும் புனிதர் பட்ட நிகழ்வையொட்டி, அக்டோபர் 13, சனிக்கிழமை, உலக, இத்தாலிய, மற்றும் உரோம் நகர காரித்தாஸ் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 14, வருகிற ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறவிருக்கும் புனிதர் பட்ட நிகழ்வையொட்டி, அக்டோபர் 13, சனிக்கிழமை, உலக காரித்தாஸ், இத்தாலிய காரித்தாஸ், மற்றும் உரோம் நகர காரித்தாஸ் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

சனிக்கிழமை மாலை, 4 மணியளவில், சாந்தா கொஸ்தான்சா வளாகத்தில், உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகிறது.

திருப்பலிக்குப் பின்னர், புனிதர்களாக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர்களான திருத்தந்தை 6ம் பவுல், மற்றும், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ ஆகிய இருவரைக் குறித்து, கர்தினால் கிரகோரியோ ரோசா சாவேஸ் அவர்களும், இயேசு சபை அருள்பணி ஜியான்பவுலோ சால்வீனி அவர்களும் சாட்சியங்கள் வழங்குவர்.

சாட்சியங்களைத் தொடர்ந்து, புலம் பெயர்ந்த, மற்றும் குடிபெயர்ந்த இளையோர் இணைந்து வழங்கும் ஆடல், பாடல் நிகழ்வு நடைபெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2018, 16:48