அருள்பணியாளரின் உருவாக்கத்தில் பெண்களின் பங்கு
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அருள்பணியாளரின் உருவாக்கப் பணியில் இன்னும் பல பெண்கள் பங்கேற்பது மிகவும் அவசியம் என்று ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள் கூறினார்.
செப்டம்பர் 13ம் தேதி முதல், 16ம் தேதி முடிய, போலந்து நாட்டின் Poznan நகரில், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தின் இறுதியில், செய்தியாளர்களைச் சந்தித்த கர்தினால் Ouellet அவர்கள், இவ்வாறு கூறினார்.
பாலின முறைகேடுகள் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள திருஅவை, இந்தப் பிரச்சனையை தீர்க்க, அரசியல் வழிகளை அல்ல, மாறாக, ஆன்மீக வழிகளை தேடுவது அவசியம் என்று கர்தினால் Ouellet அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆயர்களின் நியமனத்தில் கூடுதலானக் கவனம் தேவைப்படுகிறது என்றும், அருள்பணியாளர் பணிக்கு இளையோரைத் தெரிவு செய்தல், அருள்பணியாளரின் உருவாக்கம் என்ற பல நிலைகளில், பெண்களின் பங்களிப்பு அதிகம் இருந்தால், இத்தகையப் பிரச்சனைகளை ஓரளவு தீர்க்கமுடியும் என்றும், கர்தினால் Ouellet அவர்கள் சுட்டிக்காட்டினார். (CNA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்